Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தலைகுனிவை ஏற்படுத்தப் போகிறீர்களா ரவூப் ஹக்கீம். மனோ கணேசனிடம் ஆனந்தசங்கரி கேள்வி.

November 6, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனநாயக விரோத சக்திகளுடன் கலந்துரையாடி மீண்டும் மீண்டும் தமிழ்
மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தப் போகின்றீர்களா? இவ்வாறானவர்களிடம்
கலந்துரையாடுவது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம். மனோ
கணேசன் ஆகிய உங்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா என
தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வி
எழுப்பியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி பாராளுமன்ற
உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோருக்கு எழுதிய பகிரங்க
மடலிலேயே இவ்விடயத்தைத்  தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழ் கட்சிகளின் கலந்துரையாடலில் தாங்கள் இருவரும் கலந்து
கொண்டு தெரிவித்த கருத்துக்களை வரவேற்கின்றேன்.

தமிழ், முஸ்லிம் உறவுகள் ஒன்றிணைந்து பலமான அமைப்பாக உருவாக வேண்டும்
என்ற தங்கள் இருவரின் கருத்துக்களும் காலத்தின் தேவை என்பதை தமிழர்
விடுதலைக் கூட்டணி நன்கு உணர்ந்துள்ளது. தங்களின் முயற்சி வெற்றி பெற
வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.

2004ம் ஆண்டு தேர்தல் ஜனநாயகத்தை முற்றுமுழுதாக
குழிதோண்டிப்புதைத்துவிட்டு விடுதலைப் புலிகளின் முழு ஒத்துழைப்புடனும்,
ஆசியுடனும் தேர்தலில் களமிறங்கி வாக்குச்சாவடிகளில் அவர்களின்
ஆதரவாளர்களும் விடுதலைப் புலிகளும் நடந்து கொண்டவிதம் உலகத் தமிழர்களையே
வெட்கித்தலைகுனிய வைத்தது என்பதை எவ்வாறு மறந்தீர்கள்?

அதுமட்டுமல்ல 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளும் தமிழ்
மக்களும் அழிவதை வேடிக்கை பார்த்துவிட்டு இன்று மனித உரிமைகள் பற்றிப்
பேசுகிறார்கள். 2015ஆம் ஆண்டு நீங்கள் சேர்ந்து ஆதரவு கொடுத்த நல்லாட்சி
அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுகத்தை அனுபவித்துக்
கொண்டிருந்தார்கள்.

அப்போது சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள் பற்றி ஏன் பேசி ஒரு முடிவுக்கு
வரவில்லை. பிரச்சனைகளை தீர்த்து வைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இருந்தும்
கண்டும் காணாமல் விட்டு விட்டு இப்போது மட்டும் எங்கிருந்து ஞானம்
வந்தது.

இவ்வாறானவர்களிடம் கலந்துரையாடுவது என்பது உங்களுக்கு பெரும்
தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா,  ஜனநாயக விரோத சக்திகளுடன்
கலந்துரையாடி மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தப்
போகின்றீர்களா என அந்த மடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கைக்கு சீனா பதில்.

Next Post

இந்து மத ஸ்தலங்களில் பௌத்த எச்சங்கள் அடையாளம் காணப்படுவதாலேயே சிக்கல் நிலை ஏற்படுகின்றது – அனுர மனதுங்க.

Next Post

இந்து மத ஸ்தலங்களில் பௌத்த எச்சங்கள் அடையாளம் காணப்படுவதாலேயே சிக்கல் நிலை ஏற்படுகின்றது - அனுர மனதுங்க.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.