Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

சிறார் துஸ்பிரயோக வழக்கு: சிக்கிய 107 பேர்

December 2, 2022
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
சிறார் துஸ்பிரயோக வழக்கு: சிக்கிய 107 பேர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சிறார் துஸ்பிரயோக வழக்கு தொடர்பாக ஒரே கட்டத்தில் 107 பேர்கள் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கனடாவில் சிறார் துஸ்பிரயோகம் மற்றும் தவறான நோக்கத்துடன் இணையத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கில் பொலிசார் Maverick என்ற பெயரில் திட்டமொன்றை முன்னெடுத்து வந்தனர். 

இந்த நிலையில் ஒன்ராறியோ பொலிசாருடன் 27 குழுக்கள் இணைந்து குறித்த திட்டத்தை முன்னெடுத்தது. இதில், அக்டோபர் மாதத்தில் மட்டும் 227 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். 

168 தேடுதல் ஆணை பிறப்பிக்கப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பில் 1,032 கருவிகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். 

 மேலும், 107 நபர் மீது 428 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தாலும், ஒருமாத காலம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். 

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 61 சிறார்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 60 சிறார்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சிறார் துஸ்பிரயோகம் தொடர்பில் மேலும் 175 விசாரணைகள் தொடர்வதாகவும், எதிர்வரும் நாட்களில் வழக்குப் பதியப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

 ரொறன்ரோவில் மட்டும் 20 இடங்களில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதில் 23 பேர் கைதாகியுள்ளதாகவும் அவர்கள் மீது 96 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

இவர்களிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் காட்சிகள் உள்ளிட்ட 131 கருவிகளை கைப்பற்றியுள்ளதாகவும், இவர்களால் பாதிக்கப்பட்ட 22 சிறார்கள் அடையாளம் காணப்பட்டு அதில் 10 சிறார்களை பத்திரப்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Tags: இலங்கை
Previous Post

நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன பேருந்து – மாணவனின் படைப்பாற்றல்

Next Post

பதைபதைக்க வைக்கும் சம்பவம்: ஐவர் சடலமாக மீட்பு!

Next Post
பதைபதைக்க வைக்கும் சம்பவம்: ஐவர் சடலமாக மீட்பு!

பதைபதைக்க வைக்கும் சம்பவம்: ஐவர் சடலமாக மீட்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.