Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியில் தூக்கிலிடப்பட்டார் நாகேந்திரன்! – மன்றில் “அம்மா” என்ற அழுகுரல்!

April 27, 2022
in உலகம்
சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியில் தூக்கிலிடப்பட்டார் நாகேந்திரன்! – மன்றில் “அம்மா” என்ற அழுகுரல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மலேசியத் தமிழ் இளைஞர் தூக்கிலிடப்பட்டார் என்பதை உறவினர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற அந்த நபர் 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து 43 கிராம் ஹெரோயின் போதைப் பொருளைத் தனது தொடை இடுக்கில் மறைத்து எடுத்து வந்த வேளை சிங்கப்பூர் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

உலகிலேயே மிக இறுக்கமான சிங்கப்பூரின் போதைப் பொருள் தடுப்புச் சட்டங்கள் 15 கிராமுக்கு மேற்பட்ட அளவிலான ஹெரோயின் கடத்தலுக்கு மரண தண்டனையை வழங்க அதிகாரமளிக்கிறது.

நாகேந்திரன் மீதான குற்ற விசாரணைகள் கடந்த ஒரு தசாப்த காலமாக நீடித்தன. தான் என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டே குற்றம் புரிந்துள்ளார் என்றும் கண்டறிந்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவ நிபுணர் ஒருவர், நாகேந்திரன் ‘புத்திக் கூர்மை அல்லது அறிவு சார்ந்த குறைபாடுடையவர்’ என்பதைக் கண்டறிந்தார்.

அதனால் அவரது வழக்கு விவகாரம் சர்வதேச மட்டத்தில் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறி யிருந்தது. அறிவுசார் குறைபாடு கொண்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் வெடித்தன.

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்குமாறு செய்யப்பட்ட பல மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. கடைசியாக நாகேந்திரனின் தாயார் கருணை காட்டக் கோரிச் செய்த முறையீடும் நேற்று நிராகரிக்கப்பட்டதை அடுத்தே சட்ட விதிமுறைகளின் படி அவர் தூக்கிலிடப்பட்டார். சிங்கப்பூரின் சாங்கி சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நீதிமன்றில் அவரது குடும்பத்தினர் அவரது கைகளை பற்றி இறுதி விடை கொடுத்த சமயத்தில் நாகேந்திரன் “அம்மா” என்று கதறினார் என “ரொய்ட்டர்” செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

Tags: இலங்கைசிங்கப்பூர்தூக்குத் தண்டனைபோதைப் பொருள் கடத்தல்மலேசியத் தமிழ் இளைஞர்ஹெரோயின்
Previous Post

Top Japaneese Wives Secrets

Next Post

இலங்கையில் நபர் ஒருவரை கொலை செய்த யாசகர்!

Next Post
கர்ப்பிணி மனைவி ஆசைப்பட்டதால் பலாப்பழம் பறித்த இளைஞர் குத்திக் கொலை!!

இலங்கையில் நபர் ஒருவரை கொலை செய்த யாசகர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.