Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home ஏனையவை

கோத்தாபயவை வீட்டுக்கு அனுப்புவதே நாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு!! – சரத் பொன்சேகா

March 19, 2022
in ஏனையவை
கோத்தாபயவை வீட்டுக்கு அனுப்புவதே நாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு!! – சரத் பொன்சேகா
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாடு எதிர்கொள்ளும் இன்றைய நெருக்கடியில் தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றால் முதலில் ஜனாதிபதி தேர்தலையே நடத்தவேண்டும். கோத்தாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக வைத்துக்கொண்டு எம்மால் அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியாது. இன்றைய நெருக்கடிக்கு தேசிய அரசாங்கம் தீர்வாக அமையாது.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை வைத்துக்கொண்டு எமது அரசாங்கத்தை அமைத்துக்கொண்டால் எமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி இடமளிக்க மாட்டார். இதற்கு முன்னரும் அவ்வாறான அனுபவம் எமக்குள்ளது.

முதலில் தற்போதைய ஜனாதிபதியை மாற்றி எமக்கான ஜனாதிபதி ஒருவரை நியமித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே எமக்கான அரசாங்கத்தை அமைக்க வேண்டும். ராஜபக்சவினர் ஆட்சியில் நாட்டை சரியாக வழிநடத்துவோம் என்றனர். தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படும் என்றனர்.

ஆனால் இன்று சகல விதத்திலும் நாடு நாசமாகிக்கொண்டுள்ளது. ஒரு சிறிய நாடான எம்மால் விரைவாக அபிவிருத்தியை நோக்கி செல்ல முடியும். ஆனாலும் அவ்வாறு பயணிக்க முடியாதுள்ளது என்றால் எமது ஆட்சியாளர்களின் தவறான கொள்கையே அதற்கு காரணமாகும்.

நாட்டிற்கு தேவையானவற்றை நிராகரித்துவிட்டு அவசியம் இல்லாத விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே நெருக்கடிக்கு காரணமாகும். முதலில் நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும், சகல மக்களுக்கும் அவசியமானவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

தூய்மையான அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்க வேண்டும். குடும்ப ஆட்சி, பரம்பரை ஆட்சி ஆகிய கொள்கையை அரசியல்வாதிகளின் மனதில் இருந்து நீக்க வேண்டும்.

தேசிய அரசாங்கம் தொடர்பாகப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, இன்றைய சூழ்நிலையில் தேசிய அரசாங்கம் தீர்வு அல்ல. தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதென்றால் ரணில் விக்கிரமசிங்கதான் பொருத்தமானவராக இருப்பார். அவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியாக உள்ளவர்கள் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

Tags: இலங்கை
Previous Post

கொரோனா அபாயம் குறையவில்லை – வெளியானது எச்சரிக்கை!!

Next Post

இலங்கையில் நைஜீரிய சைபர் குற்றவாளிகள்! – விடுக்கப்பட்ட அறிவிப்பு!!

Next Post
இலங்கையில் நைஜீரிய சைபர் குற்றவாளிகள்! – விடுக்கப்பட்ட அறிவிப்பு!!

இலங்கையில் நைஜீரிய சைபர் குற்றவாளிகள்! - விடுக்கப்பட்ட அறிவிப்பு!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.