Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

குருநகரில் பட்டப் பகலில் வெட்டிக் கொலை!! – முதன்மைச் சந்தேகநபர்கள் சரண்!!

May 5, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
குருநகரில் பட்டப் பகலில் வெட்டிக் கொலை!! – முதன்மைச் சந்தேகநபர்கள் சரண்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம், குருநகரில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் 8 மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நேற்றுச் சரணடைந்தனர்.

நீதிமன்றில் சரணடைந்த மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குருநகரில் பட்டப்பகலில் வீதியில் வைத்து ஜெரன் என்ற 22 வயது இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

அதேதினம், நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த குழு ஒன்றின் மீது, மோட்டார் சைக்கிள்களில் வந்த மற்றொரு குழு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியது. அதில் இருவர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 2018ஆம் ஆண்டு நடந்த மோதல் சம்பவம் ஒன்றின் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை நடந்தது என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் நடந்து 9 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 6 பேர் சரணடைந்தனர்.

அவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முதன்மைச் சந்தேகநபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர்கள் சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

Tags: குருநகர்பட்டப் பகல்யாழ்ப்பாணம் நீதிமன்றம்விசாரணைவெட்டிக் கொலை
Previous Post

ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என விரும்பும் மக்கள்!! – கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!

Next Post

பப்ஜியால் பறிபோனது இரண்டாவது உயிர்!! – யாழ்ப்பாணத்தை உலுக்கும் மரணங்கள்!

Next Post
பப்ஜியால் பறிபோனது இரண்டாவது உயிர்!! – யாழ்ப்பாணத்தை உலுக்கும் மரணங்கள்!

பப்ஜியால் பறிபோனது இரண்டாவது உயிர்!! - யாழ்ப்பாணத்தை உலுக்கும் மரணங்கள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.