Thamilaaram News

07 - June - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்று நோயியல் வைத்தியசாலையில் தரமற்ற உணவு விடயம்: மாகாண அதிகாரிகள் குழுவென்றை அனுப்பி ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதி பிரதம செயலாளர் எஸ்.குகதாஸ் .

August 21, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

 கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண  தொற்று நோயியல்
வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்ற உணவின் தரம் குறித்து
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளாருடன் பேசி  மாகாணத்திலிருந்து
குழு ஒன்றை அனுப்பி ஆராயப்படும் என வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்
(நிதி)  எஸ். குகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

“சாப்பிட முடியாதளவுக்கு மிக மோசமான உணவு வழங்கப்பட்டு வருவதாக” கொரோனா
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடந்த வெள்ளிக்கிழமை (20) அன்று எழுத்து
மூல முறைப்பாடு ஒன்றினை அந்த வைத்தியசாலை நிர்வாகத்திடம்
கையளித்துள்ளனர். அத்தோடு உணவின் தரம் குறித்து  வைத்தியசாலை
நிர்வாகத்தின் பார்வைக்கு கண்காணிப்பு ஒளிவாங்கி (CCTV) ஊடாக
நேரலையாகவும் கொண்டு  சென்றுள்ளனர்.

 இதன் போது நோயாளிகளுக்கு உள்ளக தொடர்பாடல் கருவிகள் ஊடாகப் பதிலளித்த
மாவட்ட சுகாதார நிர்வாகம்; தாங்கள் சமைத்து வழங்கிய போது தரமான உணவினையே
வழங்கியதாகவும், இருந்தபோதும் ஊடகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக
குற்றச்சாட்டுக்கள் எழுப்பட்டதாகவும் இதனை அடுத்தே தாம் தற்போது சமைத்த
உணவு வழங்கும் நடவடிக்கையினை ஒப்பந்தகாரர் ஒருவருக்கு பெறுகை நடைமுறை
ஊடாக வழங்கியுள்ளதாகவும் ஆகவே தற்போது ஒப்பந்தகாரரால் வழங்கப்படும்
சமைத்த உணவின் தரம் தொடர்பாக தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும்
தெரிவித்துள்ளனர்.

 பெறுகை நடைமுறைகளின்படி ஒப்பந்தங்களை எடுப்பவர்கள் ஒப்பந்தத்தின்
பிரகாரம் கேட்கப்பட்ட தரம் மற்றும் அளவுகளில் பண்டங்கள் மற்றும் சேவைகளை
வழங்குகிறார்களா? என தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவதும் அவ்வாறில்லாத
பட்டசத்தில் அவற்றினைத் திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும்,
அந்த ஒப்பந்தங்களை வழங்கிய திணைக்களத் தலைவர்களுக்கே (Procurement
Entity- PE ) உரிய கடமையாகும்.

எனவே இது தொடர்பில் வடக்கு மாகாண  பிரதி பிரதம செயலாளர் (நிதி)  எஸ்.
குகதாஸ் அவர்களிடம்  தொடர்பு கொண்டு வினவியபோது அவர் மேற்படி விடயத்தை
ஏற்றுக்கொண்டதுடன் வைத்தியசாலைக்கு ஒப்பந்தகாரர் விநியோகிக்கின்ற உணவின்
தரம் குறித்து மாவட்ட/ மாகாண சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்
என்பதனையும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர்
நந்தகுமரன் அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது  “இந்த விடயம் தொடர்பில்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமே வினவ வேண்டும் அவர் தற்போது கொவிட்
19 தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தலில் இருகின்றார் அவரின் கவனத்திற்கு
நான் இவ்விடயத்தினைக் கொண்டு செல்வேன்” என உறுதியளித்தார்.

நீரிழிவு நோயாளிகள், உயர் குருதி  அழுத்த  நோயாளிகள், கர்ப்பிணிகள்,
சிறுவர்கள், குழந்தைகள் என பலர் கிருஸ்ணபுரம் தொற்று நோயியல் வைத்தியசாலை
சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களுக்கு ‘வழங்கப்படுகின்ற உணவின் தரம்
மிக மோசமாக காணப்படுகின்றது என்றும்  ஒவ்வொரு நேர உணவும் அதிக தாமதமாகவே
வழங்கப்படுகின்றது’ என்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்
தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி வழித்தடத்தில் இ.போ.ச பேருந்து ஒன்று, இன்று (21/08/2021) முதல் காலையும், மாலையும் சேவை.

Next Post

சமாசத்திற்குரிய காணி என நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட காணி மீண்டும் அடாத்தாக பிடிக்கப்படுகிறது.

Next Post

சமாசத்திற்குரிய காணி என நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட காணி மீண்டும் அடாத்தாக பிடிக்கப்படுகிறது.

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

June 7, 2023
பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

June 7, 2023
இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

June 7, 2023
மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

June 7, 2023

Recent News

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

June 7, 2023
பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

June 7, 2023
இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

June 7, 2023
மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

June 7, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.