Monday, May 12, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிளிநொச்சியில் மிக மிக இரகசியமாக காணாமல் போன ஆட்கள் பற்றிய  அலுவலகம் (OMP) அலுவலகம் திறப்பு.

August 19, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியில்  மிக மிக இரகசியமாக காணாமல் போன ஆட்கள் பற்றிய  அலுவலகம்
 OMP திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம்  கடந்த 12.08.2021 அன்று காலை  அலுவலக அதிகாரிகளின்
பங்குபற்றலுடன் மிகவும் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. வெளிப்புறத்தில் எவ்வித பெயர் பலகையும் பொருத்தாது
அலுவலகத்தின் உள்ளே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் என கடதாசியில்
பிரதி  எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டு அலுவலக நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருக்கில் மாவட்டச் செயலக  பயிற்சி  நிலையம்
அமைந்துள்ள காணியில் உள்ள பெண் தலைமைதாங்கும், மற்றும் கணவனை இழந்த
பெண்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிலைய அலுவலகத்தின் ஒரு பகுதியில்
கிளிநொச்சி மாவட்டத்திற்கான  OMP   அலுவலகம் இயங்கி வருகிறது.
இவ்வலுவலகத்தில் சுமார்  நான்கு உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகவும்
கடமைகளுக்காக இருவர் சுழற்சி முறையில்  வந்து செல்வதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

 இவ்வலுவலகம் திறந்தவிடயம் தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவியுடன்
தொடர்பு கொண்டு வினவிய போது இது பற்றிய எவ்வித தகவல்களுக்கும்  தமக்கு
தெரியாது என்றும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கே
தெரியாது  என்ன நோக்கத்திற்காக கிளிநொச்சியில்  OMP அலுவலகம்
திறக்கபட்டது என தமக்குத் தெரியாது  என்றும் அவர்  குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்
அவர்களிடம் வினவிய போது காணாமல் போன ஆட்கள் பற்றிய  அலுவலகம் தலைமை
காரியாலயம் மாவட்டச் செயலகத்திடம்  தங்களுடைய அலுவலகத்தின் செயற்பாடுகளை
கிளிநொச்சி ஆரம்பிப்பதற்கு இடம் ஒன்றை கோரியிருந்தார்கள் அதற்கமைவாக
மேற்படி இடத்தை நாம் வழங்கினோம். அங்கு அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை
ஆரம்பித்திருகின்றார்கள்.

இதேவேளை தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  OMP  அலுவலகத்திற்கு எதிரராக  குரல்
கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Previous Post

மலையாளபுரத்தில் வீடு புகுந்து குழுவின் வெறித்தனம் பல இலட்சம் பெறுமதியான உடமைகள் நாசம் .

Next Post

நாட்டை முடக்குமாறு 10 பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்.

Next Post

நாட்டை முடக்குமாறு 10 பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.