Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

கனடா தாத்தா மீது முல்லைத்தீவு யுவதிக்கு காதல்! – கடத்தல் முயற்சியால் பரபரப்பு!

November 8, 2022
in முக்கியச் செய்திகள்
கனடா தாத்தா மீது முல்லைத்தீவு யுவதிக்கு காதல்! – கடத்தல் முயற்சியால் பரபரப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தாத்தா முறையான ஒருவர் திருமணமான பெண்ணை காரில் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணொருவருக்கு சில மாதங்களின் முன்னர் திருமணம் நடந்தது. சிறிது காலத்தில் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டது.

தனது 23 வயதான மனைவிக்கும், மனைவியின் நெருங்கிய உறவினரான 63 வயதான தாத்தா முறையான நபருக்குமிடையில் காதல் தொடர்பு உள்ளது என்று கணவன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். சுமார் ஒரு மாதத்தின் முன்பாக அவர் முறைப்பாடு செய்திருந்தார்.

கனடாவில் வசித்த அந்த முதியவர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவின் பிறிதொரு பகுதியில் வசிப்பவர். முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் அந்த இளம்பெண்ணை அழைத்து விசாரித்த போது, 63 வயதான காதலனுடனேயே வாழ விரும்புகின்றேன் என்று தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த பொலிஸார் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறிப் பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின்னர் கடந்த ஒரு மாதமாக வெளித்தொடர்புகள் இல்லாமல் அந்தப் பெண், வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இருந்தும் அந்தப்பெண்ணுக்கு தாத்தா நகைகள் பணம் என பல உதவிகளை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி இரவு அந்த பெண்ணை கடத்திச் செல்ல முயன்றனர் என்று தெரிவித்து, வாகனமொன்றை சேதமாக்கிய பெண்ணின் உறவினர்கள், வாகன சாரதியையும் நையப்புடைத்தனர்.

கனடா தாத்தாவின் ஏற்பாட்டில் பிறிதொருவர் வாகனத்தில் வந்து அந்த பெண்ணை ஏற்றிச் செல்ல முற்பட்டார் என்று பெண்ணின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான நபர் வாடகைப் பெறப்பட்ட வாகனம் ஒன்றைச் செலுத்தி வந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான வாகன சாரதியும், தாக்குதல் நடத்திய பெண்ணின் சகோதரர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

Tags: கடத்தல்கனடா தாத்தாபரபரப்புமுயற்ச்சிமுல்லைத்தீவுயுவதி
Previous Post

இன்றைய ராசிபலன்- 08.11.2022

Next Post

யாழ்ப்பாணத்தில் முளைக்கும் காவலரண்கள்! – வீதிக்கு இறங்கும் இராணுவம்!

Next Post
யாழ்ப்பாணத்தில் முளைக்கும் காவலரண்கள்! – வீதிக்கு இறங்கும் இராணுவம்!

யாழ்ப்பாணத்தில் முளைக்கும் காவலரண்கள்! - வீதிக்கு இறங்கும் இராணுவம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.