Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஐ.நா வதிவிட அதிகாரி ஹனா சிங்கரிடம் 13 பக்க ஆவணத்தை கையளித்தார் வெளிவிவகார அமைச்சர்.

September 6, 2021
in இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 13
ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள 48 ஆவது கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை
கூறவுள்ளார்.

இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வௌிவிவகார அமைச்சர்
பேராசிரியர் G.L.பீரிஸ் 13 பக்கங்கள் கொண்ட ஆவணமொன்றை ஐக்கிய நாடுகள்
சபையின் வதிவிட அதிகாரி ஹனா சிங்கரிடம் கையளித்துள்ளார்.

காணாமற்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை, நிலைமாறு நீதிக்கான திட்டத்தை
உருக்குவதற்கான செயற்பாடு, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடு
உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி வௌிவிவகார அமைச்சர் இந்த
ஆவணத்தை கையளித்துள்ளதாக Sunday Times பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கை உள்நாட்டு பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு
அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர்
தெரிவித்துள்ளார்.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு மன்னிப்பு
வழங்கியமை, இடம்பெயர்ந்தவர்களை மீள குடியமர்த்தியமை, இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்த தனியார் காணிகளை விடுவித்தமை, சர்வதேச மனித உரிமை
சட்டங்களுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களையும் உள்ளடக்கிய வகையில்
இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கை – இத்தாலி நாடுகளுக்கிடையில் இருதரப்பு உறவு குறித்து பேச்சு.

Next Post

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று அன்டிஜன் பரிசோதனை.

Next Post

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று அன்டிஜன் பரிசோதனை.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.