Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

எப்போது என்று தெரியாது ஆனால் உக்ரைனே வெல்லும் – அமெரிக்க பாதுகாப்புச் செயலர் கூறுகின்றார்!!

March 5, 2022
in உலகம்
எப்போது என்று தெரியாது ஆனால் உக்ரைனே வெல்லும் – அமெரிக்க பாதுகாப்புச் செயலர் கூறுகின்றார்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

எவ்வளவு காலம் எடுக்கும் என்று சொல்லமுடியாவிட்டாலும் இந்தப் போரில் உக்ரைன் மக்களே வெற்றி பெறுவர் – என்று அமெரிக்க ராஜாங்கச் செயலர் பிளிங்கென் கூறியிருக்கிறார்.

பிரெசெல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளோடு நடந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் பிபிசியின் ராஜீகத் துறைச் செய்தியாளருக்கு அளித்த பேட்டியிலேயே இதனைக் கூறினார்.

உக்ரைன் போரை விட மிகத் தீவிரமான கவனத்தைப் பெறுவது அது இன்னும் மோசமாகி அதைத் தாண்டி வெளியே செல்லுமா என்பதுதான். நாங்கள் அக்கறை கொண்ட – கவலைப்படுகின்ற விடயம் அது.

உக்ரைன் மக்களுக்கான குடி தண்ணீரை மின்சாரத்தை, வெப்பத்தைத் தடுக்கும் விதமாக அதன் உட்கட்டமைப்பைச் சிதைக்கின்ற உத்திகளில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. ரஷ்யப் படைகள் அங்கு மக்களுக்கு எதிராக மிருகத்தனமான வழிமுறைகளைப் பின்பற்றுவதால் பேரவலமான நிலை தோன்றியுள்ளது.

சர்வதேச சமூகம் உக்ரைனுக்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய உறுதி பூண்டுள்ளது. புடின் தொடங்கிய இந்தப் போரை முடித்துவைக்க அது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

கேள்வி :உக்ரைனியர்கள் வெல்ல முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பிளிங்கென் : ஆம். காலப்போக்கில். நிச்சயமாக வெல்வார்கள். இது எவ்வளவு காலம் நீடிக்கும், எவ்வளவு காலம் எடுக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் தங்கள் சுதந்திரத்துக்காகவும் எதிர்காலத்துக்காகவும் போராடுகின்ற 45 மில்லியன் உக்ரைன் மக்களையும் ரஷ்யா தன் விருப்பத்துக்கு அடிபணிய வைக்கலாம் என்று எண்ணி அவர்களை தனது விரல் நுனியில் வைத்திருக்க நினைப்பது பல செய்திகளைச் சொல்லும்.

கேள்வி : இந்தப் படையெடுப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மொஸ்கோவின் தலைமையை மாற்றுவதற்கு அமெரிக்கா முயல்கிறதா?

பிளிங்கென் : நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை. எது நடந்தாலும் அதனை ரஷ்ய மக்கள் தான் தீர்மானிக்க முடியும்.

இதேவேளை – உக்ரைன் மீது வான் பறப்புத் தடை வலயம் ஒன்றை அறிவிப்பதற்கு நேட்டோ மறுப்புத் தெரிவித்திருப்பதை உக்ரைன் அதிபர் கண்டித்திருக்கிறார்.

“உக்ரைனின் வீழ்ச்சி என்பது ஐரோப்பாவின் வீழ்ச்சியின் ஆரம்பம்” என்று அவர் கூறியிருக்கிறார்.

Tags: உக்ரைன்ரஷ்யா
Previous Post

பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்குத் தடை விதித்த ரஷ்யா!!

Next Post

அதிக போதை மாத்திரை உட்கொண்ட கட்டுவன் இளைஞன் மரணம்!!

Next Post
பிள்ளைகளுக்கு உணவில்லாததால் தற்கொலை செய்த தந்தை!! – இலங்கையில் சோகம்!!

அதிக போதை மாத்திரை உட்கொண்ட கட்டுவன் இளைஞன் மரணம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.