Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

எதற்காக மஹாளயம் கொடுக்கவேண்டும் , அதன் பலன்கள் என்ன ?

September 30, 2021
in ஆன்மீகமும் ஜோதிடமும்
0
SHARES
Share on FacebookShare on Twitter

“கன்யா கதே சவிதரி ஸக்ருத் ஆஷாடாதி பஞ்சம அமர பக்ஷே” சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசைவரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர். மேற்கண்ட பதினைந்து நாள்களில் ஒரு முறையும் அமாவாசையன்று ஒரு முறையும் ஆக இரண்டு முறை தர்ப்பணம்செய்வது சிறப்பு. மகாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீபாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாள்களில் தர்ப்பணம் விடுவது சிறப்பு, இந்நாள்களில் தர்ப்பணம் விட முடியாதவர்கள் மற்ற ஏதாவது ஒரு நாளில் மகாளய பட்சத்திற்குள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மகாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதிகம். மகாளய பட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கை சிறப்படையும். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக மகாளய அமாவாசை கருதப்படுகிறது. ‘மகாளயம்’ என்றால் ‘பெரிய கூட்டம் என்று பொருள்’. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாள்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.

மகாளய பட்சம் 2021:

முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் இந்த சார்வரி வருட 21-09-2021 செவ்வாய் கிழமை முதல் ஆரம்பம் ஆகிறது. இன்று முதல் பதினைந்து நாள்களுக்கு மகாளய பட்சம் காலமாகும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். இந்த வருட புரட்டாசி மாதம் அமாவாசை 06/10/2021 புதன் கிழமையில் வருகிறது.

தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி (தாயார் உயிருடன் இருந்தால் பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி), தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர், நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் அனைவருக்குமாக இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம். சிலருக்குக் கர்ப்பத்திலேயே கரு கலைந்திருக்கலாம்; சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்திருக்கலாம்; சிலர், விபத்து போன்று அகால மரணம் அடைந்திருக்கலாம். அந்த ஆத்மாக்கள் அனைத்தையும் திருப்தி அடையச் செய்வதற்கான சிறந்த நாளே மகாளய பட்சம்.

2021 மகாளய பட்சத்தில் விசேஷமாக உள்ள நாள்கள்:

21-9-21 பிரதமை திதி

22-9-21 துவிதியை

23-9-21 திருதிதியை

24-9-21 சதுர்த்தி (மஹாபரணி)

25-9-21 பஞ்சமி

26-9-21 ஷஷ்டி

28-9-21 ஸப்தமி (மஹா வியதீ பாதம்)

29-9-21 மத்யாஷ்டமி

30-9-21 நவமி

1-10-21 தசமி

2-10-21 ஏகாதசி

3-10-21 துவாதசி

4-10-21திரயோதசி

5-10-21 சதுர்தசி ( போதாயன அமாவாசை)

6-10-21 மகாளய அமாவாசை

Previous Post

கால நிலை குறித்து பொது மக்களுக்கு விசேட அறிவித்தல்.

Next Post

சேதனை பசளையை பயன்படுத்தி இரணைமடு குளத்தின் கீழ் 20882 ஏக்கரில் கால போக பயிர்ச் செய்கை மாவட்ட அரசாங்க அதிபர் .

Next Post

சேதனை பசளையை பயன்படுத்தி இரணைமடு குளத்தின் கீழ் 20882 ஏக்கரில் கால போக பயிர்ச் செய்கை மாவட்ட அரசாங்க அதிபர் .

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.