Thamilaaram News

24 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

இலங்கை அரசியல்வாதிகளுக்கு எந்த உதவிகளும் வழங்காதீர்கள்!!- யஸ்மின் சூக்கா வலியுறுத்து!

May 19, 2022
in இலங்கை
இலங்கை அரசியல்வாதிகளுக்கு எந்த உதவிகளும் வழங்காதீர்கள்!!- யஸ்மின் சூக்கா வலியுறுத்து!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசியல்வாதிகள் எவரும் சர்வதேச சமூகத்திடம் தொடர்பை ஏற்படுத்துவதையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதையும் நிராகரிக்க வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் தலைவர் ஜஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் உள்ளதாவது, சர்வதேச சட்ட அதிகாரத்துக்கு உட்பட்ட வழக்குகளை ஆரம்பிப்பதையும் தடைகள் கொண்டு வரப்படுவதையும் ஏதுவாக்கத்தக்க வகையில் பெரும் வன்கொடுமைக் குற்றங்கள் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் ஊழல்கள் ஆகியவற்றின்மீது குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு குடிமக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ முன்வரவேண்டும்.

இலங்கையில் முழுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வெறுமனே அதிகார வர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழலையும் ,பொருளாதாரக் குற்றங்களையும் மட்டுமே கையாள்வதற்கானதாக அல்லாமல் பெரும் வன்கொடுமைக் குற்றங்களிலில் ஈடுபட்டு தண்டனை பெறாமல் தப்பியிருப்போர் தொடர்பிலும் தமிழர்களது நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான நீண்ட போராட்டத்துக்கும் தீர்வு வழங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட 2009 இறுதிப்போரின் இந்தச் சோகமான ஆண்டு தினத்தை நினைவுகூரும் தமிழ் மக்களுடன் நாமும் கைகோர்த்து நிற்கின்றோம்.

பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வந்த பாரதூரமான சர்வதேச குற்றச்செயல்களுக்கான தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் நடைமுறையானது. ஊழல் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் நடைமுறைக்கு இட்டுச் சென்று வரலாற்றின் மிக இக்கட்டான நிலைக்கு இலங்கையை இன்று கொண்டுசென்றுள்ளது.

இன்று இலங்கையில் நிலவும் இந்தப் பரிதாபகரமான நிலைமைக்கு இதுவே காரணமாகும். தற்போதுள்ள தேவை நீதியும் பொறுப்புக் கூறலுமேயாகும். ஆனால் இலங்கை தொடர்ச்சியாக அதைச் செய்வதற்கு விருப்பமற்று இருந்து வந்துள்ளது.

சர்வதேச சட்ட அதிகாரத்துக்குட்பட்ட வழக்குகளை ஆரம்பிப்பதையும் தடைகள் கொண்டு வருவதையும் ஏதுவாக்கத்தக்க வகையில் பெரும் வன்கொடுமைக் குற்றங்கள் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் ஊழல்கள் ஆகியவற்றின்மீது குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு குடிமக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ முன்வரவேண்டும்-என்றுள்ளது.

Tags: அரசியல்வாதிஇலங்கைசர்வதேச உண்மைநீதிக்கான திட்டம்யஸ்மின் சூக்காவிசாரணை
Previous Post

கோத்தாபய பதவி விலகல் கட்சிகளுடன் பேசியே முடிவு!!- பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Next Post

இலங்கையில் உச்சம் பெற்றுள்ள எரிபொருள் நெருக்கடி! – அரச அலுவலகங்களுக்குப் பூட்டு!

Next Post
இலங்கையில் உச்சம் பெற்றுள்ள எரிபொருள் நெருக்கடி! – அரச அலுவலகங்களுக்குப் பூட்டு!

இலங்கையில் உச்சம் பெற்றுள்ள எரிபொருள் நெருக்கடி! - அரச அலுவலகங்களுக்குப் பூட்டு!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023

Recent News

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.