Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இனிமேல் குடும்ப அட்டைக்கே எரிவாயு! – யாழ். மாவட்டச் செயலக கூட்டத்தில் முடிவு!!

May 26, 2022
in இலங்கை
இனிமேல் குடும்ப அட்டைக்கே எரிவாயு! – யாழ். மாவட்டச் செயலக கூட்டத்தில் முடிவு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்டத்தில் குடும்ப அட்டைக்கே எரிவாயுவை விநியோகிப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று மாலை பிரதேச செயலர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக எரிவாயு தேவையான மக்களை தமது முகவர்களிடம் பதிவு செய்ய அறிவுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிவாயு விநியோகத்தின்போது பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளன.

எரிவாயு மாபியாக்களால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் பல்வேறு அழுத்தங்களை அடுத்து எரிவாயு விநியோகத்தைச் சீராக்குவதற்கு மாவட்டச் செயலகம் தலையீடு செய்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிவாயு முகவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களது பகுதிகளைச் சேர்ந்த கிராம அலுவலர் பிரிவுகள் ஒதுக்கப்படும்.

அந்த கிராம அலுவலர் பிரிவுகளில் எரிவாயு தேவையான மக்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட முகவரிடம் குடும்ப அட்டையுடன் சென்று பதிவுகளை மேற்கொள்ளவேண்டும்.

பதிவுகளின் அடிப்படையில் எரிவாயுத் தேவையை கிராம அலுவலர்கள், அபிவிருத்தி அலுவலர்கள் இணைந்து கண்காணிப்புச் செய்வார்கள். எரிவாயுத் தேவை உறுதிப்பட்டவர்களின் விவரங்கள் மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பப்படும்.

அதன் பின்னர் மாவட்டத்துக்கு கிடைக்கப்பெறும் எரிவாயு எண்ணிக்கைக்கு ஏற்ப, பிரதேச செயலர் பிரிவுகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவற்றுக்கு எரிவாயு சிலிண்டர்கள் ஒதுக்கப்படும்.

பின்னர் பிரதேச செயலர்கள் தமது பிரிவுக்கு எத்தனை முகவர்களுக்கு எவ்வளவு சிலிண்டர்கள் ஒதுக்கவேண்டும் என்பதை மக்கள் முன்னுரிமையின் அடிப்படையில் தீர்மானிப்பார்கள். அதற்கு அமைவாக முகவர்கள் ஊடாக மக்களுக்கு விநியோகம் இடம்பெறும்.

இந்த விநியோக நடவடிக்கையில் குடும்ப அட்டையில் பதிவுகளை மேற்கொள்ளும் செயற்பாட்டில் அபிவிருத்தி அலுவலர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்படுவார்கள்.

எரிவாயு தேவையான சகலருக்கும் இந்தப் பொறிமுறை ஊடாக சிலிண்டர்களை வழங்க முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை கணினி மயப்படுத்தவும் மாவட்டச் செயலகம் தீர்மானித்துள்ளது.

Tags: எரிவாயு விநியோகம்கிராம அலுவலர் பிரிவுகுடும்ப அட்டைதலையீடுமாவட்ட செயலகம்
Previous Post

அரச பணியாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!- வெளியானது சுற்றறிக்கை!

Next Post

பெண் குரலில் உரையாடி பணம் பறிப்பு!!- வட்டுக்கோட்டை இளைஞர் யாழ்.நகரில் கைது!!

Next Post
புதுக்குடியிருப்பில் வீடு உடைத்து திருட்டு!- இருவர் கைது!!

பெண் குரலில் உரையாடி பணம் பறிப்பு!!- வட்டுக்கோட்டை இளைஞர் யாழ்.நகரில் கைது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.