Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

இந்தியாவுடனான உறவில் விரிசல் : கனடா எடுத்துள்ள திடீர் முடிவு

September 17, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
இந்தியாவுடனான உறவில் விரிசல் : கனடா எடுத்துள்ள திடீர் முடிவு
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ள நிலையில், கனேடிய வர்த்தக்கத் துறை அமைச்சரின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டிற்கும் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்த அடுத்த மாதம் கனேடிய வர்த்தக்கத் துறை அமைச்சர் மெரி நக் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தார்

ஆனால், ஜி20 மாநாட்டின் போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவால் புறக்கணிக்கப்பட்டதையடுத்து கனேடிய வர்த்தக்கத் துறை அமைச்சரின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மெரியின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை கனடா அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

ஜி20 உச்சி மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோ இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது, கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் உள்ள இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல்கள் வருவதாகவும் இது தொடர்பாக கனடா அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ட்ரூடோவிடம் மோடி வலியுறுத்தினார்.

காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து ஜி20 மாநாட்டை நிறைவு செய்த பின் பிற நாடுகளின் தலைவர்கள் சொந்த நாடு சென்ற நிலையில், விமானக் கோளாறு காரணமாக ட்ரூடோ கனடா செல்வதில் கால தாமதம் ஏற்பட்டது.

திட்டமிட்ட காலத்தை கடந்து அவர் 2 நாட்கள் கழித்து இந்தியாவில் இருந்து புறப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: #G20#JustinTrudeau#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanadaindia
Previous Post

முல்லைத்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Next Post

சிங்களத்தில் வெளியாகும் தீபச்செல்வனின் முதல் கவிதை நூல்

Next Post
சிங்களத்தில் வெளியாகும் தீபச்செல்வனின் முதல் கவிதை நூல்

சிங்களத்தில் வெளியாகும் தீபச்செல்வனின் முதல் கவிதை நூல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.