Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இத்தாலி ஏற்க மறுத்த அகதிகள் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்கிறது பிரான்ஸ்!

November 11, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இத்தாலி ஏற்க மறுத்த அகதிகள் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்கிறது பிரான்ஸ்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மத்தியதரைக் கடல் பரப்பில் மீட்கப்பட்ட 234 குடியேறிகளுடன் கடலில் தரித்து நின்ற மீட்புக் கப்பல் ஒன்றைத் தனது துறைமுகத்துக்குள் அனுமதிப்பதற்கு பிரான்ஸ் அரசு முடிவுசெய்துள்ளது.

கப்பல் இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸின் தெற்கில் உள்ள தூலோன் இராணுவத் துறைமுகத்துக்கு வந்து சேரும். அங்கு வைத்து அகதிகளுக்கு உடனடி மனிதாபிமான மருத்துவ உதவிகள் அனைத்தும் வழங்கப்படும். பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகு அகதிகளது புகலிட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா அறிவித்திருக்கிறார்.

“ஓஷன் வைக்கிங்” என்ற அந்த மனிதாபிமான மீட்புக் கப்பல் கடலில் மீட்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் அடங்கிய சுமார் 234 அகதிகளுடன் கடந்த 20 நாள்களுக்கு மேலாகத் துறைமுகம் செல்வதற்காக இத்தாலியின் அனுமதிக்காகத் தரித்து நின்றது.

ஐரோப்பிய மனிதாபிமான சேவை அமைப்பான தொண்டு நிறுவனத்தால் நோர்வே நாட்டின் கொடியுடன் இயக்கப்படுகின்ற அந்த மீட்புக் கப்பல் மத்தியதரைக் கடலில் தத்தளிக்கும் அகதிகளை மீட்டுக் கரை சேர்க்கின்ற பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தக் கப்பல் விவகாரம் தொடர்பில் பிரான்ஸ் – இத்தாலி இடையே கடந்த சில நாட்களாகப் பெரும் இழுபறி நிலை காணப்பட்டது. இத்தாலியின் மறுப்பை பொறுப்பற்ற செயல் என்று கூறிப் பாரிஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. இத்தாலி ஒரு பொறுப்புள்ள ஐரோப்பிய நாடு என்ற தகுதியைக் காப்பாற்றத் தவறியதற்காக பிரான்ஸ் தனது வருத்தத்தை வெளியிட்டிருக்கிறது.

அதற்குள் கப்பலின் உள்ளே மனிதப் பேரவலம் உருவாகி அகதிகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கக்கூடிய நிலைவரம் தோன்றியிருந்தது. அதனையடுத்தே பிரான்ஸ் அந்தக் கப்பலைத் தனது துறைமுகத்துக்குள் அனுமதித்திருக்கிறது.

Tags: இத்தாலிகப்பல்தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்பிரான்ஸ்
Previous Post

புலிகளின் தங்கப் புதையல்! – அம்பலமான இரகசியம் – முற்றுகையிட்ட இராணுவம்!

Next Post

படகு மூலம் கனடா செல்ல முயன்றவர்கள் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ! – இனி என்ன நடக்கும்?

Next Post
படகு மூலம் கனடா செல்ல முயன்றவர்கள் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ! – இனி என்ன நடக்கும்?

படகு மூலம் கனடா செல்ல முயன்றவர்கள் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ! - இனி என்ன நடக்கும்?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.