Saturday, May 17, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஆர்ப்பாட்டங்களை கொடூரமாக அடக்கத் திட்டமிடும் கோத்தாபய!! – சர்வதேச ஊடகம் தகவல்!

April 2, 2022
in இலங்கை
ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்!- இன்றிரவு பெரும் பதற்றம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அவசரகால நிலைமையை அறிவிக்கும் ஜனாதிபதி ராஜபக்சவின் நடவடிக்கை பலருக்கு எதிர்பாராததாக அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. இலங்கையின் சட்டங்களில் மிகவும் கொடுரமானதான அவசரகால சட்டம் வழமைக்கு மாறான அச்சுறுத்தல் ஆபத்து அல்லது பேரழிவு சூழ்நிலைகளில் மாத்திரம் பயன்படுத்தப்படவேண்டிய ஒன்று என்று சர்வதேச ஊடகமாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதியாக இந்தச் சட்டம் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பயன்படுத்தப்பட்டது.
ஆதாரம் இல்லாமல் அல்லது குற்றமற்றவர் என்ற அனுமானம் இல்லாமல் மக்களை தடுத்துவைப்பதற்கு இந்த சட்டம் அனுமதிக்கின்றது.

அத்துடன் நடமாட்ட சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் போன்றவற்றையும் இந்த சட்டம் மோசமாக கட்டுப்படுத்துகின்றது. பிடியாணையின்றி பொதுமக்களை கைதுசெய்து தடுத்துவைப்பதற்கு பொலிஸாருக்கும் படையினருக்கும் இந்த சட்டம் அதிகாரத்தை வழங்குகின்றது.

ஜனாதிபதி அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளதை தொடர்ந்து தற்போதைய நெருக்கடி நிலை தங்களிற்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து கடும் சீற்றமடைந்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையில் ஈடுபடப்போகின்றது என்ற அச்சம் தோன்றியுள்ளது.

பத்திரிகையாளர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் ராஜபக்சவின் வீட்டுக்கு வெளியே பிரசன்னமாகியிருந்த ஒரே காரணத்துக்காக பொலிஸாரால் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டோம் என்று தெரிவிக்கின்றனர். ஏற்பாட்டாளர் ஒருவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டார்.

அவசரகாலநிலையை பிரகடனம்செய்தமையை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது, எனினும் அவசரகாலநிலையை பிரகடனம் செய்த 14 நாள்களில் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டும் என்று பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

Previous Post

அரசு பெரும்பான்மையை இழக்கும் அபாயம்!! – நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க திட்டம்?

Next Post

இலங்கையில் இன்று முதல் ஊரடங்குச் சட்டம் நடைமுறை!!

Next Post
இலங்கையில் இன்று முதல் ஊரடங்குச் சட்டம் நடைமுறை!!

இலங்கையில் இன்று முதல் ஊரடங்குச் சட்டம் நடைமுறை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.