நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகால சட்டம் 2022 மே மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 6 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நாட்டில் அன்றாட செயற்பாடுகளை பேணுவதற்கும் மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை வழங்குவதற்கும் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்துக்கு அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Discussion about this post