போதைப்பொருள் அடங்கிய 40,000 இனிப்பு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவை சிறுவர்களுக்கு விற்க தயாராக வைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பாணந்துறையில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றிற்கு முன்பாக உள்ள கடையொன்றில் இவை விற்பனை செய்யப்படுவதாகவும், புறநகர் பாடசாலை மாணவர்களின் பெற்றோரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு பொலிஸார் குறித்த கடையை சுற்றிவளைத்து இரண்டு சந்தேகநபர்களை பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த கடையில் 40 ஆயிரம் போதை கலந்த இனிப்புகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
Discussion about this post