எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் நாள்களில் தனியார் பஸ் சேவைகள் முற்றாகத் தடைப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நேற்றுப் பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் மேலும் நான்கு நாள்களுக்கு மட்டுமே தனியார் பஸ்களை இயக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இன்னும் இரு நாள்களுக்குள் நீண்ட தூர பஸ் சேவைகள் நிறுத்தப்படும் என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
Discussion about this post