ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் நாடு முழுவதும் தீவிரமாக இடம்பெற்றன.
தங்காலையில் உள்ள பிரதமரின் கார்ல்டன் இல்லத்துக்கு அருகில் பெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்தப் பகுதியில் உள்ள வீதிகளை மறித்துப் போராட்டம் மேற்கொண்டதால் பதற்ற நிலைமை காணப்பட்டது.
அதேநேரம், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வீதிகளை மறித்துப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
அதேநேரம், காலி முகத் திடலில் தேரர் ஒருவர் அரசாங்கத்துக்கு எதிராக உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
Discussion about this post