Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வவுனியாவில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்! – பெரும் பதற்ற நிலைமை!

May 31, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மர்மமான முறையில் உயிரிழந்த கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி கர்ப்பம்!! – பொலிஸார் தீவிர விசாரணை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வவுனியா கணேசபுரம் 8 ஆம் ஒழுங்கைப் பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய், தந்தையை இழந்த நிலையில் மாமனாரின் அரவணைப்பில் வசித்து வந்துள்ளார். நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்ற நிலையில் மாலை 5.30 மணி வரை வீடு திரும்பவில்லை.

சிறுமியைத் தேடிய உறவினர்கள் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் நெளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். நெளுக்குளம் பொலிஸார் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் சிறுமியை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

அந்தப் பகுதியிலுள்ள ஆள் நடமாட்டம் அற்ற பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் இரவு 7.30 மணியளவில் குறித்த சிறுமி சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார். சம்பவ இடத்துக்குச் சென்ற தடயவியல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினா் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கிணற்றிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்ப்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டதுடன் மோப்ப நாய் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தது. அந்த பாவனையற்ற வர்த்தக நிலையத்தில் மதுபான போத்தல்களுடன் கயிறும் காணப்பட்டது.

சிறுமியின் மரண விசாரணைகளின் பின்னரே மரணத்துக்கான காரணம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தமையுடன் மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து தடயவியல் பொலிஸர் முன்னெடுத்துள்ளனர்.

Tags: கணேசபுரம்சிறுமியின் சடலம்தனியார் கல்வி நிலையம்வவுனியாவிசாரணை
Previous Post

ஜூலையில் க.பொ.த உ/த பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும்!!

Next Post

விமலின் மனைவிக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

Next Post
விமலின் மனைவிக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

விமலின் மனைவிக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.