Saturday, May 17, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ்.கல்லுண்டாயில் மாநகர சபையின் அசமந்தப் போக்கு : முதியவருக்கு நேர்ந்த கதி

October 4, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ்.கல்லுண்டாயில் மாநகர சபையின் அசமந்தப் போக்கு : முதியவருக்கு நேர்ந்த கதி
0
SHARES
Share on FacebookShare on Twitter

கல்லூண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் பகுதிக்கு தீ வைத்ததனால் குறித்த வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மயக்கமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கல்லூண்டாயில் உள்ள, யாழ். மாநகர சபையினரின் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் பகுதிக்கு இன்று காலை தீ வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புகை வீதியெங்கும் பரவியது.

மருத்துவமனைக் கழிவுகள்

இதன்போது துவிச்சக்கரவண்டியில் குறித்த வீதியால் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் துவிச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு வீதியோரத்தில் அமர்ந்திருந்ததாகவும், வீதியால் சென்றவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்க நிலையை போக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் கழிவுப் பொருட்களுக்கு அடிக்கடி தீ மூட்டும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மருத்துவமனை கழிவுகளும் அதில் உள்ளடங்குவதனால், அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படக்கூடிய அபாயகரமான சூழ்நிலைகளும் காணப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டுவதால், வீதி எங்கும் புகை மூட்டமாகி வீதியில் செல்லும் மக்கள் பல்வேறு விதமான இன்னல்களை எதிர்கொள்வதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

யாழ்ப்பாண மாநகர சபை

இருந்தும் கூட இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமையால் உரிய தரப்பினர் அசமந்தமாக உள்ளனரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியானது மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் காணப்படுகின்றது. இருப்பினும் யாழ்ப்பாண மாநகர சபையினரே அந்த பகுதியில் கழிவுகளை கொட்டுகின்றனர்.

எனவே யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளரும் மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளரும் இது குறித்து அதிக கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களது கோரிக்கையாக காணப்படுகின்றது.

Previous Post

வெளிநாடுகளுக்கு வேலை தேடி பறக்கும் இலங்கையர்கள் அதிகரிப்பு

Next Post

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

Next Post

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.