Thamilaaram News

29 - January - 2023 - Sun
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

மகிந்தவின் பதாகைக்குள்ள பெறுமதிகூட தமிழரின் உயிருக்கில்லை!!- நிரோஷ் சாடல்!!

March 25, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மகிந்தவின் பதாகைக்குள்ள பெறுமதிகூட தமிழரின் உயிருக்கில்லை!!- நிரோஷ் சாடல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வரவேற்புப் பதாகைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட தமிழர் உயிர்களுக்கு நாட்டில் கொடுக்கப்படவில்லை என்பதையே இன்றைய சம்பவம் வெளிப்படுத்துகின்றது என்று வலி. கிழக்குப் பிரதேச சபைத் தலைவர் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்தபோது, ஆள்களைத் திரட்டி வந்து பிரதமரை வரவேற்பதற்கான பதாகைகளை எரித்தார்கள் என கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் பிரகாரம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செல்வரட்ணம் மயுரன் ஆகியோரிடம் நேற்று வியாழக்கிழமை பொலிஸ் வாக்கு மூலம் பெறப்பட்டது.

பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முறைப்பாடு ஒன்றின் பிரகாரம் நாம் மட்டுவில் பகுதியில் ஆள்களைக் கூட்டிவந்து பிரதமரின் வரவேற்பு பதாகைகளை எரியூட்டியதாக எம் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் எம்மிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

நாம் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி வேண்டி ஜனநாயக வழியில் அந்தப்பகுதியில் போராடினோம் என்றும் யாரால் எரிக்கப்பட்டது என்பது தெரியாது எனவும் போராட்டம் ஜனநாயக வழியிலேயே இடம்பெற்றது என்பதையும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படமுடியாதது என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.

ராஜபக்சக்களின் ஆட்சியிலேயே ஆயிரக்கணக்காணவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டனர். அதற்கு நீதி கேட்டுப் போராடியவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததாகும். தாய்மார் தாக்கப்பட்டது தொடர்பாக இந்த நாட்டில் விசாரணை இல்லை.

ஆனால் வீதிகளில் தூக்கப்பட்ட பதாகைகளை யார் எரித்தார்கள் என நாட்டில் பெரும் விசாரணைகள் நடைபெறுகின்றன. இதுதான் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்த நிலை. தாய்மார் தாக்கப்படும்போது நிகழ்வில் பேசிய பிரதமர் வடக்கிலுள்ளவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தனக்குள்ளது என பொய்யுரைத்தார்.

தமிழர் உயிர்களைக் காட்டிலும் கட்டவுட்களுக்கு இலங்கையில் பாதுகாப்புள்ளது என்பதை தாய்மார் தாக்கப்பட்டதை கணக்கில் ஏனும் எடுக்காது பிரதமரின் பதாகை எரிக்கப்பட்டமை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கும் அரச அதிகாரத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது என்றார்.

Tags: தமிழர் உயிர்தியாகராஜா நிரோஷ்பதாகைமகிந்தமட்டுவில்யாழ்ப்பாணம்ராஜபக்சக்கள்வரவேற்புப் பதாகைவலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்
Previous Post

ரயில் கட்டண அதிகரிப்பு திடீரென இடைநிறுத்தம்!

Next Post

இலங்கைக்கு வந்த ஐ.எம்.எவ். பிரதானி பதவி விலக முடிவு!

Next Post
இலங்கைக்கு வந்த ஐ.எம்.எவ். பிரதானி பதவி விலக முடிவு!

இலங்கைக்கு வந்த ஐ.எம்.எவ். பிரதானி பதவி விலக முடிவு!

Discussion about this post

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.7k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

January 29, 2023
துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

January 29, 2023
குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

January 29, 2023
02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

January 29, 2023

Recent News

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

January 29, 2023
துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

January 29, 2023
குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

January 29, 2023
02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

January 29, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.