Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதன் ஊடாகவே பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்

August 23, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதன் ஊடாகவே பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பெருந்தோட்டங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க அவர்களுக்கு 10 பேர்ச் நிலத்தை சட்டரீதியான அனுமதியுடன் வழங்குவதே தீர்வாக அமையும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை தோட்டத்தில் இடம்பெற்ற விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர்,

“மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை கீழ்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு முதலில் நாம் கவலையை தெரிவித்துக்கொள்கிறோம்.

நடைபெறக்கூடாத சம்பவமொன்றே நடைபெற்றுள்ளது. தேவையற்றவிதத்தில் கட்டப்பட்டிருந்த இந்த வீட்டை அகற்றுவதற்கு தோட்ட உதவி முகாமையாளர் நேரடியாக தலையீடு செய்துள்ளார்.

தேவையற்ற விதத்தில் கட்டப்படும் வீடுகளை அகற்றுவதற்கு சட்ட ரீதியான முறையொன்று உள்ளது. அதனை உதவி முகாமையாளர் பின்பற்றாது இவ்வாறு செயல்பட்டுள்ளார்.

குறித்த உதவி முகாமையாளருக்கு கட்டாய விடுறையை அளித்து இடத்தையும் மாற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நான் பணித்துள்ளேன்.

அவருக்கு எதிராக உரிய விசாரணைகள் நடைபெற்றதும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த உடனே அமைச்சர் ஜீவன் தொண்டமான், குறித்த இடத்திற்கு சென்று, அந்த மக்களுக்காக நின்றார். அதேபோன்று மனோகணேசன் மற்றும் இராதாகிருஷ்ணன் போன்றோரும் எனக்கு அழைப்பை மேற்கொண்டு இதுதொடர்பில் வலியுறுத்தினார்.

24 மணித்தியாலத்துக்குள் அமைச்சர் ஜீவன் அங்கு சென்றார். முகாமையாளர் உட்பட அனைவரும் அங்கு அனுப்பப்பட்டனர். தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணியை வழங்க வேண்டும். இதனை சட்ட ரீதியாக உரிய வகையில் செய்ய வேண்டும். இதன்மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்“ என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர், “இவ்வாறான சம்பவங்கள் எமது பிரதேசங்களிலும் நடைபெற்றுள்ளன. உரிய வகையில் வழக்குகள் இடம்பெறாது. விசாரணைகள் இடம்பெறாது. இவை குறித்தும் விசாரணைகள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்“ என்றார்.

Tags: #Colombo#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

இலங்கையில் 216 மருந்துகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு!

Next Post

மக்களுக்கு நன்றி பாராட்டிய கனேடியப் பிரதமர்

Next Post
மக்களுக்கு நன்றி பாராட்டிய கனேடியப் பிரதமர்

மக்களுக்கு நன்றி பாராட்டிய கனேடியப் பிரதமர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.