Friday, June 20, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிரதமர் வீட்டுச் சுவரில் போராட்ட வாசகங்கள்!!- போராட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு!

April 25, 2022
in இலங்கை
பிரதமர் வீட்டுச் சுவரில் போராட்ட வாசகங்கள்!!- போராட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அலுவலகம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், அதை நோக்கிப் பேரணி செல்வது தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்கள் திடீரென விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்றுப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் பேரணி, ஜனாதிபதி செயலகம் அருகிலுள்ள ’கோத்தாகோகம’வை சென்றடையும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.

நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்ற பொலிஸார், வீதித் தடைகளையும் அமைத்திருந்தனர். இதனால் போராட்டக்காரர்கள் திடீரென, மாற்று வழியூடாக விஜேராம மாவத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டின் முன்பாக சுமார் பல ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர்.

வீட்டின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை தகர்த்து உள்நுழைவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு அந்த முயற்சி தடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பிரதமரின் வீட்டின் முன்பாகவுள்ள வீதியை மறித்து போராட்டக்காரர்கள் அமர்ந்திருந்தனர். இதன்போது வெள்ளை நிறத்திலான பிரதமரின் வீட்டுச் சுவரில், போராட்ட வாசகங்களை எழுதினர்.

‘கொலைக்கார கோத்தா வீட்டுக்குப் போ’, ‘அன்று ரத்துபஸ்வல இன்று ரம்புக்கன’, ‘225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம்’ ஆகிய வாசகங்களையும் எழுதினர்.

அதன் பின்னர் நேற்று இரவு 6 மணியளவில் காலிமுகத்திடலுக்கான வீதித் தடைகள் அகற்றப்பட்டமையால், பிரதமரின் இல்லத்திலிருந்து காலிமுகத்திடல் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.

Tags: ஆர்ப்பாட்டம்கொழும்புகோத்தாபயபாதுகாப்புபிரதமர் இல்லம் முற்றுகைமஹிந்த
Previous Post

பொழும்பில் பொலிஸாரால் நிரந்தர வீதித் தடை!!- சுற்றுலாவிகள் பெரும் பாதிப்பு!!

Next Post

அனைத்து இடங்களிலும் மின்வெட்டு குறைப்பு!

Next Post
ஏப்ரல் மாதத்துடன் மின்வெட்டு குறையுமாம்!! – மின்சார சபை கூறுகின்றது!!

அனைத்து இடங்களிலும் மின்வெட்டு குறைப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.