Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

பதவி மீது பேராசை கொண்டால் இதுதான் நடக்கும்!! – மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த சகோதரர்!

May 20, 2022
in ஏனையவை
பதவி மீது பேராசை கொண்டால் இதுதான் நடக்கும்!! – மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த சகோதரர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மஹிந்த ராஜபக்ச தனது இரண்டு பதவிக்காலம் முடிந்ததும் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள துன்பத்தை அனுபவித்திருக்க வேண்டியதில்லை என்று மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போது உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசியல் செய்தால் விட்டுக்கொடுப்பது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும். பதவிகளுக்குப் பேராசை கொண்டால் இதுபோன்ற துன்பங்களை அனுபவிக்க நேரிடும். சரியான நேரத்தில் பதவிகளில் இருந்து வெளியேறுவது முக்கியம்.

மஹிந்த ராஜபக்ச சுமார் 50 ஆண்டுகளாக நாட்டுக்காகப் பெரும் சேவையாற்றியுள்ளார். ராஜபக்சக்கள் 90 ஆண்டுகள் நாட்டுக்காகச் சேவையாற்றியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க அதிர்ஷ்டசாலி. 2015ஆம் ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, இன்று ஒரு ஆசனத்தில் பிரதமராகியுள்ளார்.

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னரே அனைத்து வன்முறைகளும் நடந்தன. தவறான அறிவுறுத்தல்களே அதற்குக் காரணம். தாக்குதல் நடத்தியவர்களை ஏன் பொலிஸார் தடுக்கவில்லை என்பதும், ஏன் அவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பதும் மர்மமாக உள்ளது.

இந்தப் போராட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பியும், முன்னிலை சோசலிசக் கட்சியும் இருக்கின்றன. இது இரகசியம் அல்ல.
பொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்.- என்றார்.

Tags: FBTTசமல் ராஜபக்சநாடாளுமன்றம்பதவி பேராசைபதவிக்காலம்மஹிந்த ராஜபக்ச
Previous Post

வடக்கு மாகாணத்தில் நான்காவது “டோஸ்”- வடக்கு சுகாதாரப் பணிமனையின் அவசர அறிவிப்பு!

Next Post

கோதுமை மா, பாண் விலைகள் அதிகரிப்பு!!

Next Post
கோதுமை மா, பாண் விலைகள் அதிகரிப்பு!!

கோதுமை மா, பாண் விலைகள் அதிகரிப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.