Thamilaaram News

29 - January - 2023 - Sun
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

நெருக்கடிகளை உணர்ந்துகொண்டு செயற்படுங்கள் பொது மக்களிடம் கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் அவசர வேண்டுகோள்.

August 11, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நெருக்கடிகளை உணர்ந்துகொண்டு செயற்படுங்கள் பொது மக்களிடம் கிளிநொச்சி
பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் அவசர
வேண்டுகோள்

 நாளுக்கு நாள்  மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது எனவே பொது மக்கள் இந்த நெருக்கடியை உணர்ந்துகொண்டு  செயற்பட
தவறின் பேரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கிளிநொச்சி
பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன்
தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது  நோயாளி 07.11.2020  அடையாளம்
காணப்பட்ட நாள் தொடக்கம் யூலை 2021 வரை 1400 கொவிட் 19 நோயாளிகள்
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   இவர்களில் 14 கர்ப்பிணித் தாய்மார்கள், 10
வயதுக்குட்பட்ட 52 சிறுவர்கள், அடங்குகின்றனர். அத்தோடு மூன்று மரணங்கள்
ஏற்பட்டுள்ளன.

 மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. ஆனால் பெரும்பாலான  பொது மக்கள்  எவ்வித சமூக பொறுப்பும் இன்றி
சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது நடமாடித் திரிவதனை  அவதானிக்க
முடிகிறது. பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காதுவிடின் தொற்று
பரவும் வேகம் மிகவும் அதிகரிக்கும். எனத் தெரிவித்த அவர்.

தடுப்பூசியினை கிளிநொச்சி மக்கள் அதிக ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்
மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் அனைத்தும் அந்தக் காலப்
பகுதிக்குள் செலுது்தி முடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியினை
செலுத்திக்கொண்டாலும் சகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும் இதனை
அனைத்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக கொவிட் தொற்றாளர்கள்
எண்ணிக்கை  தற்போது அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிக
எண்ணிக்கையானவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். கொவிட் 19 பரிசோதனை
மேற்கொள்கின்றவர்களில் இவ்வாறு அதிகரித்த தொற்றாளர்கள் இனம்
காணப்படுகின்ற போது  சமூகத்தில் இன்னும் எத்தனை பேர் தொற்றுடன்
இருக்கின்றார்கள் என்பதும் முக்கியமானது.

மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார வளங்களை கொண்டுள்ள கிளிநொச்சி போன்ற
மாவட்டங்களில் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரித்த மருத்துவ வளங்கள்
அனைத்தும் அங்கு திசைதிருப்பபடுகின்ற போது ஏனைய நோய்கள், சிகிச்சைகளை
கவனிக்க முடியாது போய்விடும் இதனால்  அதிகளவு பாதிப்புக்கள்  மற்றும்
பேரிழப்புக்கள் ஏற்படும் எனவே பொது மக்கள் இந்த நெருக்கடிகளை
புரிந்துகொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொறுப்புடன் செயற்பட
வேண்டும் என்பதனை இந்த இடத்தில் வலியுறுத்துகின்றேன் எனக் குறிப்பிட்டார்.

Previous Post

ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்.

Next Post

காரைநகர் – யாழ்ப்பாணம் 784 வழித்தட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இன்று காலை கல்லுண்டாய் வீதியில் (AB21 ) விபத்துக்குள்ளானது.

Next Post

காரைநகர் - யாழ்ப்பாணம் 784 வழித்தட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இன்று காலை கல்லுண்டாய் வீதியில் (AB21 ) விபத்துக்குள்ளானது.

Discussion about this post

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.7k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

January 29, 2023
துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

January 29, 2023
குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

January 29, 2023
02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

January 29, 2023

Recent News

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

January 29, 2023
துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

January 29, 2023
குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

January 29, 2023
02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

January 29, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.