Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

நாட்டில் இராணுவ ஆட்சியா? -மறுக்கிறார் கமால்!

May 12, 2022
in இலங்கை
நாட்டில் இராணுவ ஆட்சியா? -மறுக்கிறார் கமால்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டில் அரசாங்கம் இல்லாத நிலையில், இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன நிராகரித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான எவ்வித எண்ணமும் இல்லை. இலங்கையில் அவ்வாறு நடந்ததும் இல்லை. 60 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதற்கான முயற்சி இடம்பெற்றது என்ற தகவலொன்று உள்ளது.

ஆனால் இங்கு ஒருபோதும் இராணுவ ஆட்சி சாத்தியப்படாது. அதற்கான தேவைப்பாடும் படையினருக்கு கிடையாது. அரசமைப்பின் பிரகாரமே இராணுவம் செயற்படும்.

நாட்டில் வன்முறைகள் பாரதூரமானால் அவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்படுமே தவிர, அது ஒருபோதும் இராணுவ ஆட்சியாக மாறாது.” – என்றார்.

அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், இல்லாத அமைச்சுக்கு எப்படி செயலாளராக இருக்க முடியும், உங்களின் உத்தரவுகள் சட்டவலுவானவையா என்ற கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு செயலர், “நான் பலவந்தமாக பதவிக் கதிரையில் அமர்வதறகு ஆசைப்படும் நபர் கிடையாது. அமைச்சரவை கலைக்கப்பட்டிருந்தாலும், எனக்கு மீள் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக சட்டமா அதிபரிடமும் ஆலோசனை பெறப்பட்டு, அரசமைப்பின் பிரகாரமே எனது நியமனம் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் பாதுகாப்பு செயலாளராக உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.

Tags: இராணுவ ஆட்சிஇலங்கைகமால் குணரத்னபாதுகாப்பு செயலாளர்
Previous Post

சஜித்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு!!

Next Post

ஊரடங்கு நீக்கப்பட்டால் மின்வெட்டு அதிகரிக்கும்!!

Next Post
ஏப்ரல் மாதத்துடன் மின்வெட்டு குறையுமாம்!! – மின்சார சபை கூறுகின்றது!!

ஊரடங்கு நீக்கப்பட்டால் மின்வெட்டு அதிகரிக்கும்!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.