Thamilaaram News

29 - January - 2023 - Sun
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home covid

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் நாளை முதல் தடுப்பூசி – தொற்று நோயியல் வைத்தியர் நிமால்

July 27, 2021
in covid
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் நாளை முதல்
தடுப்பூசி – தொற்று நோயியல் வைத்தியர் நிமால்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  கொவிட் 19
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நாளை(28.07.2021)  காலை ஒன்பது மணிக்கு
ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த  தவறாது
தங்களுக்குரிய தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு கிளிநொச்சி பிராந்திய
தொற்று நோயியலாளர்  வைத்தியர் நிமால் அருமைநாதன் அவர்கள்
கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  போது  கல்வித் துறை
ஊழியர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள் முச்சக்கர வண்டி சாரதிகள்,
ஊடகவியலாளர்கள்  ஆகியோரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தங்களுக்கு
அருகில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்குச் சென்று
தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  ஒன்பது தடுப்பூசி நிலையங்கள் தற்போது
அமைக்கப்பட்டுள்ளன, கிளிநொச்சி மத்திய கல்லூரி,  அக்கராயன் மகா
வித்தியாலயம், வட்டக்கச்சி மத்திய கல்லூரி, உருத்திரபுரம் வைத்தியசாலை,
தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் வைத்தியசாலை,பூநகரி வைத்தியசாலை,
வேரவில் வைத்தியசாலை, பளை மத்திய கல்லூரி ஆகிய நிலையங்களில் தடுப்பூசி
ஏற்றும் பணிகள் நாளை (28.07.2021) ஆரம்பிக்கப்படவுள்ளது. 30 வயதுக்கு
மேற்பட்டவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள நிலையங்களுக்குச் சென்று
தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளவும். எனத் தெரிவித்துள்ள மருத்துவர் நிமால்
அவர்கள்

மேலும் மாற்றுவலுவுள்ளோர், கடுமையான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், படுக்கை
நோயாளிகள், முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு எமது நடமாடும்
சேவை பிரிவினர் அவர்களின் இருப்பிடம் சென்று தடுப்பூசி வழங்குவார்கள்.
எனவே இந்த தேவையுள்ளவர்கள் 021 2285933 தொடர்பு கொண்டு முற்பதிவு
செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்தோடு இச் சேவையினை தவறாக
பயன்படுத்தாது தேவையுள்ளவர்கள் மாத்திரம் பயன்படுத்திக்கொள்ளுமாறும்
தெரிவித்துள்ள அவர்

தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் தொடர்ச்சியாக ஒரு சில நாட்கள்
வரை இடம்பெறவுள்ளது. எனவே மக்கள் அனைவரும் தங்களுக்குரிய தடுப்பூசியினை
பெற்றுக்கொண்டு கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து தங்களை
பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு, இலங்கையிலும், எமது
மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில்
இவ்வாய்ப்பினை பொது மக்கள் கட்டாயம் பயன்படுத்திக்கொள்வதோடு,

கிளிநொச்சியில் உள்ள 12 வாரங்களுக்கு அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் இந்
நிலையங்களுக்குச் சென்று தங்களுக்குரிய தடுப்பூசியை பெற்றுக்கொள்ள
முடியும் இவர்களுக்கு என பிரத்தியோகமான ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Previous Post

ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிபுரிந்த மேலும் இரு பெண்கள் மர்ம மரணம்

Next Post

கிளிநொச்சியில் இருந்து யாழ்நோக்கி சூட்சமமான முறையில் கால்நடைகள் திருடியவர்கள் கைது !

Next Post

கிளிநொச்சியில் இருந்து யாழ்நோக்கி சூட்சமமான முறையில் கால்நடைகள் திருடியவர்கள் கைது !

Discussion about this post

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.7k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

January 29, 2023
துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

January 29, 2023
குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

January 29, 2023
02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

January 29, 2023

Recent News

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

January 29, 2023
துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

January 29, 2023
குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

January 29, 2023
02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

January 29, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.