Thamilaaram News

28 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

கலவரத்துக்கு காரணமான இரு எம்.பிகள் உட்பட 7 பேர் இதுவரையில் கைது!

May 18, 2022
in இலங்கை
வர்த்தகரை கொலை செய்ய திட்டமிட்ட குழு!!- சுற்றிவளைப்பில் கைது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கோட்டாகோகம மற்றும் மைனாகோகம போராட்டக்காரர்கள்மீது கடந்த 09 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு எம்.பிக்கள் உட்பட ஏழுபேர் இன்று வரை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவ மேயர் சமன் லால் பெர்னாண்டோ, சீதாவக்கை பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன, களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், ‘நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர் டான் பிரியசாத்தும் சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், காலிமுகத்திடல் வன்முறை தொடர்பாக நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோரே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அரசாங்கம் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ‘கோத்தா கோ கம’ மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’ என்னும் பெயர்களில் தன்னெழுச்சியாக அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொண்டு வந்த மக்கள் மீது கடந்த 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்குதல்களை நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜெயதிலக, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 22 பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்குச் சட்டமா அதிபர் நேற்றுமுன்தினம் பரிந்துரைத்தார்.

இந்த 22 சந்தேகநபர்கள் தொடர்பில் நேரடி, சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்கள் இருப்பின் அவர்களை உடனடியாகக் கைதுசெய்து, சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

சந்தேகநபர்கள் அவர்களின் முகவரிகளில் இல்லாவிடின் சாட்சியங்களை முன்வைத்து அவர்களைக் கைதுசெய்வதற்கு நீதிவான் ஒருவரிடமிருந்து திறந்த பிடியாணையைப் பெறவேண்டும் என்றும், உரிய முகவரிகளில் இல்லாத சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்குப் பொதுமக்களின் உதவியை நாடுமாறும் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இதுவரை இரு எம்.பிகள் உட்பட 7 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: 7 பேர் கைதுஇலங்கைகுற்றப்புலனாய்வுப் பிரிவுபொதுஜன பெரமுன எம்.பிமே 9 கலவரம்
Previous Post

இலங்கை அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!!

Next Post

பதுங்கியிருந்த நாமல் – மஹிந்த இன்று நாடாளுமன்றத்தில்!!

Next Post
மஹிந்த, நாமலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள பயணத் தடை!! – வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் கைதாவார்களா?

பதுங்கியிருந்த நாமல் - மஹிந்த இன்று நாடாளுமன்றத்தில்!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

25 வயதான இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை!

25 வயதான இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை!

March 28, 2023
ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்!

ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்!

March 28, 2023
கேக் கொள்வனவு செய்வதைத் தவிருங்கள்- மக்களுக்கு அறிவுறுத்து

கேக் கொள்வனவு செய்வதைத் தவிருங்கள்- மக்களுக்கு அறிவுறுத்து

March 28, 2023
செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!

செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!

March 28, 2023

Recent News

25 வயதான இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை!

25 வயதான இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை!

March 28, 2023
ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்!

ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்!

March 28, 2023
கேக் கொள்வனவு செய்வதைத் தவிருங்கள்- மக்களுக்கு அறிவுறுத்து

கேக் கொள்வனவு செய்வதைத் தவிருங்கள்- மக்களுக்கு அறிவுறுத்து

March 28, 2023
செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!

செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!

March 28, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.