Saturday, May 17, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

உக்ரைனியர்களுக்கு விரைவாக வதிவிட அனுமதி வழங்க டென்மார்க் முடிவு!! – உடனடியாக வருகிறது விசேட சட்டம்

March 6, 2022
in உலகம்
உக்ரைனியர்களுக்கு விரைவாக வதிவிட அனுமதி வழங்க டென்மார்க் முடிவு!! – உடனடியாக வருகிறது விசேட சட்டம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

டென்மார்க் அங்கு வரும் உக்ரைன் அகதிகளை ஏனைய நாடுகளது அகதிகளைக் கையாள்வது போலன்றி விசேட சலுகைகள் வழங்கிக் கவனிக்கவுள்ளது.

உக்ரைன் நாட்டவர்களுக்காக அதன் குடியேற்றவாசிகள் தொடர்பான இறுக்கமான கொள்கைகளைக் கைவிட்டு மிக விரைவிலேயே விசேட சட்டம் ஒன்றை அமுலுக்குக் கொண்டுவரவுள்ளது. அச்சட்டம் அங்கு தங்கியுள்ள ஏனைய வெளிநாட்டு அகதிகளுக்குப் பொருந்தாது.

உக்ரைனியர்கள் மிக குறுகிய காலத்தில் இரண்டாண்டுகால வதிவிட அனுமதியையும் உடனடியாகத் தொழில்வாய்ப்பையும் பெற்றுக் கொண்டு டெனிஷ் சமூகத்துடன் இணைந்துகொள்ளப் புதிய சட்டம் வாய்ப்பளிக்கவுள்ளது. சமூக நல உதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கவுள்ளன.

விரைவாக வதிவிட அனுமதியைப் பெற்றுக்கொண்டு நாட்டின் தொழில் சந்தையில் இணைவதோடு அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதை துரிதப்படுத்தவும் விரும்புகின்றோம் என்று டென்மார்கின் வெளிவிவகாரம் மற்றும் குடியேற்ற அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

உக்ரைனில் இருந்துவரும் வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் இந்த விசேட சட்டத்தின் கீழ் கையாளப்படமாட்டார்கள் என்பதையும் டெனிஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உதாரணமாக உக்ரைனில் கல்வி கற்கும் அல்லது தொழில் புரியும் இந்தியர்கள், இலங்கையர்கள் அல்லது ஆபிரிக்கர்கள் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படமாட்டார்கள்.

தற்சமயம் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் உக்ரைனியர்கள் டென்மார்க்கில் 90 நாள்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் சென்றுவரவும் தங்கியிருக்கவும் முடியும். ஆனால் வதிவிட உரிமை கோரிவிட முடியாது.

Tags: உக்ரைனியர்கள்உக்ரைன்டென்மார்க்ரஷ்யாவிசேட சட்டம்
Previous Post

New Detail by detail Roadmap For British Mail Order Bride

Next Post

சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் விபத்து!! – இளைஞர் படுகாயம்!!

Next Post
சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் விபத்து!! – இளைஞர் படுகாயம்!!

சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் விபத்து!! - இளைஞர் படுகாயம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.