Thamilaaram News

29 - January - 2023 - Sun
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home உலகம்

உக்ரைனின் தாக்குதலில் ரஷ்யப் படைத் தளபதி உயிரிழப்பு!!

March 5, 2022
in உலகம்
உக்ரைனின் தாக்குதலில் ரஷ்யப் படைத் தளபதி உயிரிழப்பு!!

CRIMEA, RUSSIA - MARCH 19, 2021: Major General Andrei Sukhovetsky, commander of the Novorossiysk guards mountain air assault division of the Russian Airborne Troops, takes part in an exercise at Opuk range. Sergei Malgavko/TASS (Photo by Sergei MalgavkoTASS via Getty Images)

0
SHARES
Share on FacebookShare on Twitter

உக்ரைன் போரில் ரஷ்யப்படைகளின் முக்கிய கட்டளைத் தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

ரஷ்யாவின் ஏழாவது வான்வழித் தரையிறக்கப் பிரிவின் கட்டளைத் தளபதியும் மத்திய இராணுவ மாவட்டத்தின் கூட்டு ஆயுதப் படைகளது உப தளபதியுமாகிய 47 வயதுடைய மேஜர் ஜெனரல் ஆன்ட்ரே சுகோவெட்ஸ்கி (Major General Andrey Sukhovetsky) வான்வழித் தரையிறக்க முயற்சி ஒன்றின் போது சினைப்பர் சூட்டுக்கு இலக்கானார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

தலைநகர் கீவுக்கு வட கிழக்கே Hostomel நகரில் நடத்தப்பட்ட தரையிறக்கத் தாக்குதலிலேயே தளபதி சிக்குண்டார் என்று உக்ரைன் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போரில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் என்று ரஷ்யா அறிவித்த 498 படையினரில் அதி உயர் தர நிலையில் உள்ளவர் சுகோவெட்ஸ்கியே ஆவர்.

ஆனால் சுமார் 9அயிரம் ரஷ்யப்படையினரைத் தாங்கள் கொன்றுவிட்டதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது. மேஜர் ஜெனரலின் மரணத்தை ரஷ்யா முறைப்படி அறிவிக்கவில்லை. அவரது சக படைவீரர்கள் அந்தச் செய்தியை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அவர் எங்கே எவ்வாறு உயிரிழந்தார் என்பதும் சுயாதீன செய்தி நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இராணுவத்தின் வான்வழித் தரையிறக்கக் குழுக்களின் சண்டைகளில் பல சாதனைகளைப் புரிந்தவர் சுகோவெட்ஸ்கி. 2014 இல் கிரிமியா ஆக்கிரமிப்புப் போரிலும் முக்கிய பங்குவகித்தவர்.

அவரது மரணம் உக்ரைன் போரில் ரஷ்யப்படைகள் சந்தித்த குறிப்பிடத்தக்க பின்னடைவு என்று கூறப்படுகிறது.

இதேவேளை, உக்ரைனுக்கு மேலே வான் பறப்புத் தடை வலயம் (no-fly zone)ஒன்றை அறிவிக்குமாறு உக்ரைன் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் நிராகரித்திருக்கிறார்.

உக்ரைனில் தரை, மற்றும் ஆகாய மார்க்கமாக எந்த வழிகளிலும் தலையிடுவதில்லை என்ற நேட்டோவின் முடிவில் மாற்றம் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
நேட்டோவின் அத்தகைய தலையீடு உக்ரைன் போரை ஐரோப்பா முழுவதுக்குமான யுத்தமாக மாற்றிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் ஆலை அமைந்துள்ள Zaporizhzhia பகுதிக்கு சண்டையை விஸ்தரித்தமைக்காக ரஷ்யாவுக்கு நேட்டோ கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

அணு ஆலைப் பகுதியில் தாக்குதல்கள் நடந்துள்ள போதிலும் அங்குள்ள ஆறு அணு உலை களும் பாதுகாப்பாக உள்ளன என்பதை சர்வதேச அணு எரிசக்தி முகவரகம் (International Atomic Energy Agency – IAEA) உறுதிப்படுத்தியிருக்கிறது.

Tags: Major General Andrey Sukhovetskyஇலங்கைஉக்ரைன்ரஷ்யா
Previous Post

மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும் சாத்தியம்!! – மின்சார சபையின் அறிவிப்பு

Next Post

வங்காள விரிகுடாவில் விரிவடையும் தாழமுக்கம்!! – கன மழைக்கு வாய்ப்பு!!

Next Post
வங்காள விரிகுடாவில் விரிவடையும் தாழமுக்கம்!! – கன மழைக்கு வாய்ப்பு!!

வங்காள விரிகுடாவில் விரிவடையும் தாழமுக்கம்!! - கன மழைக்கு வாய்ப்பு!!

Discussion about this post

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.7k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

January 29, 2023
துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

January 29, 2023
குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

January 29, 2023
02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

January 29, 2023

Recent News

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

January 29, 2023
துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

January 29, 2023
குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

January 29, 2023
02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

January 29, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.