Thamilaaram News

20 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

இல்லாத ஊருக்கு வழி சொல்கின்றது அரசாங்கம்! – லக்ஸ்மன் கிரியெல்ல கடும் காட்டம்!

May 7, 2022
in இலங்கை
இல்லாத ஊருக்கு வழி சொல்கின்றது அரசாங்கம்! – லக்ஸ்மன் கிரியெல்ல கடும் காட்டம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

65 பேர் கொண்ட எதிர்க்கட்சி அரசாங்கம் அமைத்தால் முதலாவது வரவு செலவு-திட்டத்திலேயே அரசாங்கம் தோற்கடிக்கப்படலாம்.

அதனால் எதிர்க்கட்சி அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று தெரிவிப்பது நடைமுறைச்சாத்தியமான தீர்வல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும். தற்போதுள்ள அரசாங்கம் தொடர்பாக சர்வதேசத்துக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அதனால் மக்கள் ஆணையை வெளிப்படுத்த இடமளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

வெளியே இருந்து மக்கள் தெரிவிக்கும் விடயங்கள் இந்த நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கின்றனவா என்பது தொடர்பாக நாங்கள் அனைவரும் மனசாட்சியை தொட்டு கேட்கவேண்டும்.

மக்களின் பிரச்சினைக்கு அரசாங்கம்தான் தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் எதிர்க்கட்சியின் தீர்வு என்ன என கேட்கமுடியாது?.

உலகில் எந்த நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சியிடம் தீர்வு கேட்பதில்லை. அதேபோன்று எங்களை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று ஆளும் தரப்பினர் கோரி வருகின்றனர்.

எமக்கு அரசாங்கம் அமைக்க முடியாது. எங்களுக்கு 65 பேரே இருக்கின்றனர். அவ்வாறு நாங்கள் அரசாங்கம் அமைத்தால் முதலாவது வரவு-செலவு திட்டத்திலேயே எமது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டுவிடும்.

ஆட்சி அமைக்க மக்கள் ஆணை கிடைத்தால் அதைச் செய்ய வேண்டும். முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலகவேண்டும். அவ்வாறு இல்லாமல் எதிர்க்கட்சியிடம் அரசாங்கம் அமைக்க வேண்டும என்று தெரிவிப்பது நடைமுறைச்சாத்தியமான தீர்வல்ல.

ஆங்கில பத்திரிகை ஒன்று மேற்கொண்ட கருத்து கணிப்பில் 96 வீதமானவர்கள் கோத்தாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும் என தெரிவித்துள்ளனர். வீதியில் போராடும் மக்களும் அதையே கூறுகின்றனர்.

இளைஞர்களின் எதிர்காலம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வை அரசாங்கம் வழங்கவேண்டும். அதனால் நாங்கள் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்திருக்கின்றோம்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னர் நாங்கள் நாடாளுமன்றத்துக்கு வருவது தொடர்பாக தீர்மானம் எடுக்கவேண்டி வரும்.

எமது நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கப்ப்டாவிட்டால் சபாநாயகரான உங்களது வீட்டை மக்கள் முற்றுகையிடுவார்கள். அதனால் அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: இடைக்கால அரசாங்கம்இலங்கைஇன்றுபோராட்டம்லக்ஸ்மன் கிரியெல்லஜனாதிபதி
Previous Post

மக்கள் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும் அரசாங்கம் – சந்திரிகா வலியுறுத்து

Next Post

நயன்தாராவும், விக்னேஷ் சிவன் திருமணம்? – வெளியான பிந்திய தகவல்!

Next Post
நயன்தாராவும், விக்னேஷ் சிவன் திருமணம்? – வெளியான பிந்திய தகவல்!

நயன்தாராவும், விக்னேஷ் சிவன் திருமணம்? - வெளியான பிந்திய தகவல்!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

March 20, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

March 20, 2023
அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

March 20, 2023
மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

March 20, 2023

Recent News

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

March 20, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

March 20, 2023
அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

March 20, 2023
மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

March 20, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.