Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட 1,000 தொழிற்சங்கங்கள்!! – நாளை முடங்குகிறது நாடு!!

April 27, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட 1,000 தொழிற்சங்கங்கள்!! – நாளை முடங்குகிறது நாடு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் நாளை பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அரசதுறை, அரச சார்பற்ற தனியார் துறை, பெருந்தோட்டத்துறை, வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட பல துறைகள் கூட்டாக இணைந்தே இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இப்போராட்டத்தில் அரச நிர்வாக சேவையும் இணைந்துள்ளமை விசேட அம்சமாகும் என தொழிற்சங்க பிரமுகர்கள் தெரிவித்தனர்.

அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள், மின்சார சபை தொழிற்சங்கங்கள், சுகாதார தொழிற்சங்கங்கள், துறைமுக ஊழியர்சார் தொழிற்சங்கங்கள், தபால் துறைசார் தொழிற்சங்கங்கள், பொருளாதார மத்திய நிலையங்களில் உள்ள தொழிற்சங்கங்கள், வங்கிசார் தொழிற்சங்கங்கள் உட்பட மேலும் பல தொழிற்சங்கங்கள், பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

அத்துடன், மீனவ அமைப்புகள், விவசாய அமைப்புகள், ஆட்டோ சாரதிகள் சங்கங்கள் என்பனவும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளன. அதேபோல அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கமும் கூட்டு தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தொழிற்சங்க பிரமுகர்கள்,

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் வலியுறுத்திவருகின்றனர். மக்களின் இந்த கோரிக்கைக்கு அரசு செவிமடுக்க வேண்டும். பதவி விலகுவதற்கு ஒருவாரம் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் தீர்வு இல்லையேல், சம்பந்தப்பட்டவர்கள் பதவி விலகும்வரை, போராட்டங்களை மேற்கொள்ளவும் நாம் தயார்.” – என்று குறிப்பிட்டனர்.

எனினும், பதவி விலகுவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் மறுத்துவிட்டனர்.

புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் அரசமைப்பதற்கு ஜனாதிபதி முற்படுகின்றார். ஆனால் அதற்கான சூழ்நிலையை கௌரவமாக ஏற்படுத்திக்கொடுப்பதற்கு மஹிந்த தரப்பு மறுக்கின்றது. இதனால் தெற்கு அரசியல் களத்தில் இன்னும் அரசியல் நெருக்கடி நிலைமை, கட்டுக்குள் வரவில்லை.

Tags: அரசாங்கம்இலங்கைதொழிற்சங்கங்கள்பணிபுறக்கணிப்புபோராட்டம்முடங்கம்
Previous Post

22 வயது இளைஞன் சாவு!!- வீடியோ கேம் விபரீதமா?

Next Post

சவர்க்காரம், சலவைத் தூளுக்கு தட்டுப்பாடு! – விலையுயர்வு அச்சத்தால் வாங்குக் குவிக்கும் மக்கள்!

Next Post
சவர்க்காரம், சலவைத் தூளுக்கு தட்டுப்பாடு! – விலையுயர்வு அச்சத்தால் வாங்குக் குவிக்கும் மக்கள்!

சவர்க்காரம், சலவைத் தூளுக்கு தட்டுப்பாடு! - விலையுயர்வு அச்சத்தால் வாங்குக் குவிக்கும் மக்கள்!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.